உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஸ்ரீராம், 16; எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எலவனாசூர்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை