மேலும் செய்திகள்
சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு
26-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் மயில்சாமி, 21; இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. கடந்த மார்ச் மாதம் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, மயில்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் மயில்சாமி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Jul-2025