உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வைகுண்ட ஏகாதசி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இனிப்பு வழங்கல்

வைகுண்ட ஏகாதசி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இனிப்பு வழங்கல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமூக ஆர்வலர் கணேஷ் இனிப்பு வழங்கினார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதிகாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் சமூக ஆர்வலர் கணேஷ் இனிப்புகளை வழங்கினார். முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை