உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தந்தைக்கு மது பழக்கம்  இளம்பெண் தற்கொலை 

தந்தைக்கு மது பழக்கம்  இளம்பெண் தற்கொலை 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் மது பழக்கத்தால், மனம் உடைந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்,45; இவருக்கு 2 பெண் உட்பட மொத்தம் 3 பிள்ளைகள். இவருக்கு மதுபழக்கம் உள்ளதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 9ம் தேதி வழக்கம் போல மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மகள் அபிராமி,18; வீட்டில் மின்விசிறியில் துாக்கு போட்டார். குடும்பத்தினர் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை