மேலும் செய்திகள்
புகார் பெட்டி ..
28-Mar-2025
கச்சிராயபாளையம், ; நல்லாத்துார் டாஸ்மாக் அருகே மயங்கி கிடந்த வாலிபர் இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு, 35; இவருக்கு சசிகலா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள செல்வராசு, நேற்று மதியம் 12:00 மணிக்கு நல்லாத்துார் டாஸ்மாக் கடை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வராசு இறந்ததாக தெரிவித்தார். இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Mar-2025