உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேலைவாய்ப்பு முகாம் 151 பேர் தேர்வு

வேலைவாய்ப்பு முகாம் 151 பேர் தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது.இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்து, தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.இதில், 34 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 252 பேர் பங்கேற்றனர். 151 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், இவர்களுக்கு மற்றொரு நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கே, வேலைவாய்ப்பிற்குரிய ஆணை வழங்கப்படும் என, வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி