உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அதிகார நந்தி வாகனத்தில் வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா

அதிகார நந்தி வாகனத்தில் வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் உற்சவமான ஜூலை 8ம் தேதி காலை சூரிய பிரபையும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தது. மூன்றாம் நாளான ஜூலை 9ம் தேதி, காலை பூத வாகனமும், இரவு ராவணேஸ்வர வாகன உற்சவமும் நடந்தது. நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை நாக வாகனமும், இரவு ரிஷப வாகன உற்சவமும் நடந்தது.ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று, காலை 8:00 மணிக்கு அதிகார நந்தி வாகன உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மருகுவார் குழலி அம்பிகையுடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் ராஜ வீதிகளில் உலா வந்தார். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ