| ADDED : ஜூன் 01, 2024 06:43 AM
சென்னை : செம்மஞ்சேரியில் நேற்று துவங்கிய, அகில இந்திய பால் பேட்மின்டன் போட்டியில், 72 அணிகள் பங்கேற்றுள்ளன.இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.ஆண்களுக்கான இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 72 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், நாக் - அவுட் முறையில் நடக்கின்றன.முதல் போட்டியில் பாகல்பூர் பல்கலை அணி, 23 - 35, 35 - 33, 35 - 12 என்ற கணக்கில், பெங்களூரு பல்கலை அணியை வீழ்த்தியது.மற்றொரு போட்டியில், எம்.ஜி., பல்கலை அணி, 35 - 22, 31 - 35, 35 - 32 என்ற கணக்கில், அழகப்பா பல்கலையை தோற்கடித்தது. போட்டிகள், தொடர்ந்து நாளை மறுநாள் வரை நடக்கின்றன.