உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எண்ணுாரில் கலக்கும் மஞ்சளாறு தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு

எண்ணுாரில் கலக்கும் மஞ்சளாறு தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு

எண்ணுார்:திருவொற்றியூர் மண்டலம், எண்ணுாரில், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர், எண்ணுார் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், முகத்துவார குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இவர்கள் தங்களது 'பைபர்' படகுகளை, தாழங்குப்பம் ஒட்டிய கடற்கரையில் நிறுத்தி, முகத்துவாரம் வழியாகச் சென்று, ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தான் இறால், மீன், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கும்.இந்த நிலையில் நேற்று பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, கொசஸ்தலை ஆறு இணையும் எண்ணுார் கழிமுகப் பகுதியில், தண்ணீருடன் மஞ்சள் நிறத்தில் கழிவுகள் ஆற்றில் கலந்து, தண்ணீரில் படர்ந்து காணப்பட்டது. இந்தாண்டு மட்டும், முகத்துவாரம் பகுதி நான்காவது முறையாக மஞ்சள் நிறமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.மீனவர்கள் கூறியதாவது:எண்ணுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள், தங்கள் நிறுவன கழிவுகளை சுத்திகரிக்காமல், அப்படியே முகத்துவாரம் வழியா கடலில் கலக்க செய்வதால், மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.இதனால், ரசாயனம் மற்றும் ஆயில் கழிவுகளால், மீன்கள் இறந்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது.ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க செய்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இயற்கையான நிகழ்வுஎண்ணுார் கொசஸ்தலை ஆற்று நீர் மஞ்சள் நிறமாக காட்சியளிப்பது குறித்து ஏற்கனவே தகவல் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், முகத்துவார தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டது. இது, ஒரு இயற்கையான நிகழ்வு. இதனால் மீனவளங்கள் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதுபோல புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரைகள் மஞ்சள் நிறமாக காட்சியளித்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆற்றில் தண்ணீர் குறையும்போது, தரை பகுதிகள் திட்டுகள் தெரிவதால், இதுபோன்று மஞ்சள் நிறமாக காட்சியளிப்பது வழக்கம்.--- மாசு கட்டுப்பாட்டு அதிகாரி.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

எண்ணுார் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், ராட்சத குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, எண்ணுாரின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேக்கி, தெரு குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. வாரம் இருமுறை வினியோகமாகும் குடிநீர், கடந்த நான்கு மாதங்களாக, மஞ்சள் நிறமாக வந்துக் கொண்டிருக்கிறது. குடம், பாத்திரங்களில் பிடிக்கப்படும் குடிநீரில், சில மணி நேரங்களில் மஞ்சள் திட்டுகள் தனியாக பிரிந்து நிற்கின்றன. வேறு வழியின்றி இதை குடிக்கும் மக்கள், உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த குடிநீரில் உணவு சமைத்தாலோ, பால் காய்ச்சினாலோ கெட்டு போய் விடுவதாக, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால், சுகாதாரமற்ற குடிநீரால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை