உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த மீண்டும் அவகாசம்

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த மீண்டும் அவகாசம்

காஞ்சிபுரம்:திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜன., 1ம் தேதிக்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம், 2024 ஆக., 1ம் தேதி முதல் 2025 ஜன., 1 வரை, 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள், 2020 பிப்., மாதம் அரசு வெளியிட்ட அனைத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை