மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
37 minutes ago
விவசாயிகள் தின விழா
43 minutes ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
54 minutes ago
களியனுார் : வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சி, பஜனை கோவில் தெரு அருகில், அப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பஜனை கோவில், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிவாசிகள் கூடுதல் தண்ணீர் தேவைக்கு குடிநீர் தொட்டிநீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்காததால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி வீணாகி வருவதால், அப்பகுதி மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. எனவே, மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர களியனுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
37 minutes ago
43 minutes ago
54 minutes ago