| ADDED : ஜூன் 26, 2024 11:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர்; திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், ஒரு கோட்டத்தில் மின் நுகர்வோர் கூட்டம் நடைபெறும்.மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று, காலை 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்து உள்ளது.