உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சியில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை மறுதினம் நடைபெற உள்ளது.இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், போட்டோ உள்ளிட்டவற்றுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, நாளை மறுதினம், காலை 10:00 மணிக்கு, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி