மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
14 hour(s) ago
விவசாயிகள் தின விழா
14 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
15 hour(s) ago
காஞ்சிபுரம்,:கோனேரிகுப்பம் ஊராட்சி, ரமணா அவென்யூ விரிவாக்கம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், சரோஜினி தெருவில், புதிய குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், 22 அடி அகலம்கொண்ட சரோஜினி தெருவில், சாலையோரம் அமைக்க வேண்டிய இரு மின்கம்பங்கள், மாறாக சாலையில், சாலை அகலத்தின் விளிம்பு பகுதியில் இருந்து, 5 அடி உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதில், ஒரு மின்கம்பம், சாலை வளைவில் உள்ளதால், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் திரும்பும்போது சிரமம்ஏற்படுகிறது. எனவே, ரமணா அவென்யூ விரிவாக்கம், சரோஜினி தெருவில், 22 அடி அகலமும், சாலை வளைவு பகுதியில், 30 அடி அகலமும் உள்ளது.மின்வாரிய அதிகாரிகள்சாலையின் அகலத்தை மீண்டும் அளவீடு செய்து, சாலை விளிம்பில் இருந்து, 5 அடி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ளன.மின் பிரிவு உதவி பொறியாளர் கமலகண்ணன்கூறியதாவது:வருவாய் துறையினர் வாயிலாக சாலையைஅளவீடு செய்த பின்னர்தான், சாலை அகலத்தின் விளிம்பு பகுதியில்மின்கம்பம் அமைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago