| ADDED : ஆக 04, 2024 01:34 AM
வாலாஜாபாத், :வாலாஜாபாத் ஒன்றியம், சீயமங்கலம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் காவல் தெய்வமாக முத்து மாரியம்மனை வழிபடுகின்றனர்.நடப்பாண்டிற்கான ஆடி மாதம் கூழ்வார்த்தல் விழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து 3 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு, சீயமங்கலம் கிராமத்தில் உள்ள விநாயகர், கங்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு குடம் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து குடம் அலங்காரத்தில் அம்மனின் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.மதியம் 1:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.