மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
22 minutes ago
விவசாயிகள் தின விழா
28 minutes ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
39 minutes ago
ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில், ஒரகடம் மேம்பாலம் அருகில் குளம் உள்ளது. 15ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகஇந்த குளம்விளங்கியது.ஒரகடம் சிப்காட்தொழிற்பூங்கா அமைந்த பின், ஒரகடம்சந்திப்பில் கடைகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன. அதன்பின், குளம் பராமரிப்பின்றி போனது.குளத்தை சுற்றியுள்ளஅடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர்வடிகால் வாயிலாக குளத்தில் கலக்க விடுகின்றனர்.இதானல், குளத்தின்நீர் மாசடைந்துவருகிறது.மேலும், அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள் குளத்தில்கொட்டப்பட்டு வருகிறது.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.மேலும், குளத்தின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி, குளத்தை சுற்றி சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து சீரமைக்க, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
22 minutes ago
28 minutes ago
39 minutes ago