| ADDED : ஆக 09, 2024 12:19 AM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் மலையாள தெரு வழியாக, சதாவரம் கிராமத்திற்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள மும்முனை சாலை சந்திப்பில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.இதனால், சாதாரண மழைக்கே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.வேகமாக செல்லும் வாகனங்களால் சகதிநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மலையாள தெருவில் சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்கமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.