| ADDED : ஜூலை 14, 2024 12:25 AM
காஞ்சிபுரம்:உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், ஜூலை மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் காரை கிராமம், உத்திரமேரூரில் காவித்தண்டலம், வாலாஜாபாத்தில் சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் பிச்சிவாக்கம், குன்றத்துாரில் பூந்தண்டலம் என, ஐந்து தாலுகாவிலும் நேற்று நடந்தது.இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 124 மனுக்கள் வரப்பெற்றன.இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 94 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்திலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.மீதமுள்ள 30 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.