உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமால்பூரில் 15 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருமால்பூரில் 15 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் கிராமம் உள்ளது. இங்கு, 15 ஏக்கர் பரப்பளவில், நீர்நிலை புறம்போக்கு நிலங்களை, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.இதுகுறித்து, தனி நபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில், புகார் அளித்திருந்தார். நேற்று, நெமிலி தாசில்தார் ஜெயபிரகாஷ், நீர்வள உதவி பொறியாளர் பழனி, அரக்கோணம் டி.எஸ்.பி., வெங்கடேசன் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து உள்ளனர். நெற்பயிர் அறுவடைக்கு பின், ஆக்கிரமிப்பு முற்றிலும் அகற்றப்படும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை