மத நல்லிணக்க பேரணி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீஸ் எஸ்.பி.,சண்முகம் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.மத நல்லிணக்கம் மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துகள் அடங்கிய பதாகைகளை, மாணவ - மாணவியர் கையில் ஏந்தி சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.