வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தெரு நாய்கள் தொல்லை தமிழகத்தில் எல்லை மீறிவிட்டது
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.சாலையை மறித்து நிற்கும் நாய்களால், பள்ளி செல்லும் மாணவியர், பெண்கள், முதியோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிப்பதற்காக குரைத்தபடி விரட்டி செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இரவு நேரங்களில் கூட்டமாக திரியும் நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேபோல், நள்ளிரவு நேரங்களில் கூட்டமாக சேர்ந்து குரைப்பதால், மக்கள் துாக்கம் இழக்கின்றனர். எனவே, சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தெரு நாய்கள் தொல்லை தமிழகத்தில் எல்லை மீறிவிட்டது