உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் ஒயர் நத்தப்பேட்டையில் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின் ஒயர் நத்தப்பேட்டையில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்வழித்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், சாலை வளைவு பகுதியில் இரு மின்கம்பங்களுக்கு இடையே மின் ஒயர்கள் தாழ்வாகசெல்கின்றன. இதனால், இரு கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, சாலையோரம் ஒதுங்கும் வாகனம் மின் ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல்உள்ளது.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை