உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

முசரவாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் கிராமத்தில் இருந்து மேல் ஒட்டிவாக்கம் செல்லும் சாலை உள்ளது. வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இச்சாலை தரைமட்டத்தைவிட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், சாலையோரம்மண் அணைக்கப்படவில்லை. இதனால், சாலையோரம் உள்ள 1 அடி ஆழத் திற்கு பள்ளம் ஏற்பட்டுஉள்ளதால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, முசரவாக்கம் - மேல்ஒட்டிவாக்கம் சாலையில், சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ