உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கங்கையம்மனுக்கு கோடை உற்சவம்

கங்கையம்மனுக்கு கோடை உற்சவம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சுக்லபாளையம் கோவிந்தன் தெருவில், கங்கையம்மனுக்கு நடப்பு ஆண்டுக்கான கோடை உற்சவம் நேற்று முன்தினம் ஜலம் திரட்டுதலுடன் துவங்கியது.நேற்று, காலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது.இன்று, பிற்பகல் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தல் நிகழ்வு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை சுக்லபாளையம் இளைஞர் குழுவினர், கோவிந்தன் தெருவாசிகள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை