உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துாய்மை பணியாளரை கடித்து குதறிய நாய்

துாய்மை பணியாளரை கடித்து குதறிய நாய்

கோயம்பேடு, : நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், இரு ஆண்டுகளாக கோயம்பேடு சந்தையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.கடந்த 19ம் தேதி பணி முடிந்து, காய்கறி சந்தை,'சி' மற்றும் 'டி பிளாக்' இடையே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தெரு நாய் ஒன்று, திடீரென குமாரின் காலில் கடித்துள்ளது.அவர் காலை உதறியும், நாய் விடாமல் கடித்ததால், வலியால் துடித்துள்ளார்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.குமாரை தெரு நாய் கடித்த வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியானது.இதையடுத்து, அங்காடி நிர்வாக குழு அளித்த புகாரின்படி, கோயம்பேடு சந்தையில் திரிந்த மூன்று தெரு நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பிடித்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை