மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., காலி பணியிடத்தால் காட்டாங்குளம் மக்கள் அவதி
7 hour(s) ago
இன்று இனிதாக
7 hour(s) ago
மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி
7 hour(s) ago
திருவள்ளூர் : சென்னை -- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மதுரவாயல் -- வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலையை 2014ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்க திட்டம்அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு,2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்துவருகின்றன.இதில், திருமழிசைபகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள நெடுஞ்சாலையில், சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல்மாறியுள்ளது. இணைப்புச் சாலை பணிகளும் பல பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சேதமடைந்த சாலை சிறு மழைக்கே குளம்போல் மாறியுள்ளது.சில தினங்களாக பெய்து வரும் சிறு மழையில்,பூந்தமல்லி மற்றும்ஸ்ரீபெரும்புதுார் டோல் கேட் பகுதியில் அதி விரைவு நெடுஞ் சாலையில் மழைநீர் குளம்போல்தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago