உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

திருத்தணி : திருத்தணி வருவாய் கோட்டத்தில், போலீசார் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ஐந்து நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை சாராயம் விற்றது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக, ஆறு பெண்கள் உட்பட 15 பேரை கைது செய்தனர். இதில், 70 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டரவேடு காலனி பகுதியில் நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர்.இதில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல், 47 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 10 லிட்டர்கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ