உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வருவாய் ஆய்வாளர்கள் 27 பேர் பணியிட மாற்றம்

வருவாய் ஆய்வாளர்கள் 27 பேர் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையில் பணியாற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பலர் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.அதேபோல, குறுவட்ட அளவில் வருவாய் ஆய்வாளராக இரு ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பலர் உள்ளனர்.எனவே, நிர்வாக காரணங்களுக்காக, மாவட்டம் முழுதும், 27 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும், விடுப்போ அல்லது மறுப்பு தெரிவித்தல் ஆகியவை ஏற்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை