உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேஷ வாகனத்தில் வைகுண்ட பெருமாள் உலா

சேஷ வாகனத்தில் வைகுண்ட பெருமாள் உலா

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது.இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 2ம் தேதி காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் வைகுண்ட பெருமாள் உலா வந்தார்.இதில், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இரவு ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது.நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு சந்திர பிரபையில் உலா வந்தார்.ஏழாம் நாள் உற்சவமான நாளை மறுநாள் காலை தேரோட்டமும், ஜூன் 9ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை