| ADDED : ஆக 16, 2024 11:43 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி அலுவலகத்தையொட்டி, மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவு நீர் செல்லும் கால்வாய்உள்ளது.இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது. இதனால், மழைக்காலத்தில்கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், ஒரே இடத்தில் தேங்குவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்குள், வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க,சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.