உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெசவாளர் குடியிருப்பில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?

நெசவாளர் குடியிருப்பில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, 47வது வார்டு, ஓரிக்கை அண்ணா நெசவாளர் குடியிருப்பில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.மண் கால்வாயாக இருப்பதால் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, அண்ணா நெசவாளர் குடியிருப்பில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ