உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

காஞ்சிபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு, 55. கட்டட தொழிலாளி. இவர், கடந்த ஜனவரி 29 ம் தேதி, தனது வீட்டில் சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்த அவர், பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை