உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குருவிமலை சாலையோரத்தில் மண் அரிப்பால் பள்ளம்

குருவிமலை சாலையோரத்தில் மண் அரிப்பால் பள்ளம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இருந்து, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், உத்திரமேரூர் செல்லும் வாகனங்கள் குருவிமலை கிராமம் வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், குருவிமலை கிராமத்தின், சாலையோரம் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது.இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, குருவிமலை கிராமத்தில் ஏற்பட்டுள்ள சாலையோர பள்ளத்திற்கு மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி