உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை

வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், காமராஜர் சாலை, கிழக்கு பகுதியில், பயணியரின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பயணியர் நிழற்குடை அருகில் உள்ள கடைகள் மற்றும் பல்வேறு அலுவலங்களுக்கு சைக்கிள் மற்றும் டூ -- வீலரில் வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ