உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்குவதால், நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலை அதிகரிப்பால் இந்த சாலையில் போக்குவரத்து மேலும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்பதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரங்களிலும், சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஒரகடம் அருகே காரணித்தாங்கலில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் காற்றில் கிழிந்து தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், காற்றில் கிழந்து தொங்கும் பேனர், சாலையோரம் உள்ள மின் கம்பி மீது விழும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, கிழிந்து தொங்கும் பேனரை அகற்றுவதுடன், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ