உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆகாய கன்னியம்மனுக்கு ஆடி திருவிழா விமரிசை

ஆகாய கன்னியம்மனுக்கு ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், செங்குந்தர் குடும்பத்தாரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடித் திருவிழா நேற்று, காலை 9:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகாய கன்னியம்மன் வீதியுலா வந்தார். இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி