முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுரை
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் கொளப்பாக்கம் ஊராட்சியில், மழைநீர் விரைவாக வெளியேற வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.