உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆற்று கால்வாய் மோசம் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்

வேகவதி ஆற்று கால்வாய் மோசம் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், விப்பேடு ஊராட்சி குண்டுகுளம் மூவேந்தர் நகர் எதிரில், திருப்பருத்திகுன்றம் ஏரிக்கும். வேகவதி ஆற்றுக்கும் செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குண்டுகுளம் மூவேந்தர் நகர் எதிரே, வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் வாயிலாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள விவசாய நிலத்தை மூழ்கடித்துள்ளது.எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் எதிரில் வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயில், புதர்போல மண்டி கிடக்கும் செடி, கொடிகளை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை