மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
18-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மூன்றாம் நவராத்திரி பெருவிழ கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 6:00 மணிக்கு பத்ரகாளி, வைஷ்ணவி, மகேஸ்வரி, சாமுண்டி, சியாமளாதேவி, வராஹி என, பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.இதில், ஏழாம் நாள் உத்சவமான நேற்று மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
18-Mar-2025