எம்பார் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு
மதுரமங்கலம்,:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில், கமலவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் எம்பார் சுவாமி கோவில் உள்ளது.ஏப்., 13ம் தேதி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று முன்தினம் ஸப்தாவரணம் த்வாதச ஆராதனையுடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெற்றுள்ளது.