புதர்மண்டிய மழைநீர் கால்வாய்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பிரதான சாலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், நீர்வழித்தடங்களில் புல், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது.இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் முழுமையாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் புத்தேரி ஊராட்சியில், புதர்மண்டியுள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.