மேலும் செய்திகள்
பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில்களில் தேரோட்டம்
04-Sep-2025
உத்திரமேரூர்:-உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில் உள்ள சொக்கம்மன் கோவிலில் ஆவணி மாத தேர்த் திருவிழா விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இந்த திருவிழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர்.
04-Sep-2025