மேலும் செய்திகள்
கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
28-Sep-2024
சாலையில் படர்ந்துள்ளசீமைகருவேல முட்செடிகள்சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பகுதியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நடைபாதையையொட்டி வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகள் நடைபாதையை மறித்து, சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.எனவே, நடைபாதையில் இடையூறாக உள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எல்.கண்ணன், காஞ்சிபுரம்
28-Sep-2024