மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
17 hour(s) ago
விவசாயிகள் தின விழா
17 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
17 hour(s) ago
செங்கல்பட்டு:பழவேலி பாலாற்றில்,ஆழ்துளைக் கிணறுகள்அமைக்கும் பணிகள்நிறைவு பெற்று, 'பைப்லைன்' அமைக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் பணிகளை முடித்து, குடிநீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு பழவேலி, மாமண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குழாய்கள் வாயிலாக தண்ணீர், தலைமை நீரேற்று நிலையத்திற்கு ஏற்றப்படுகிறது. அதன்பின், நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம், தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்படுகிறது. கூடுதல் செலவு
பாலாற்று குடிநீர் மற்றும்கிணறுகள் வாயிலாக 45 லிட்டர் தண்ணீர், நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 80,000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள் மற்றும் கேபிள்கள் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையாகி உள்ளது. அப்போது, குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால், குழாய் மற்றும் கேபிள் மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் கூடுதலாக செலவு செய்கிறது.இதை தவிர்க்க, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள், கேபிள்கள் அடித்து செல்லப்படுவதை தடுக்கவும், கூடுதல் குடிநீர் வழங்கவும், நகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியது.அதன்பின், குடிநீர் பணிக்காக, மூலதன மானிய நிதி 2022 - -23ம் நிதியாண்டில், 7.60 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.அதன்பின், பழவேலி பாலாற்றில், புதிதாக ஐந்து நீராதார கிணறுகள் மற்றும் தலா இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.மேலும், பாலாற்றில் 4 கி.மீ., துாரத்திற்கு 18 அடி ஆழத்தில் இரும்பு துாண்கள் அமைத்து, பைப் லைன்கள், கேபிள்கள் அமைக்க, பணி உத்தரவு வழங்கப்பட்டது. கேபிள் பணி தீவிரம்
இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் நிறுவனம் எடுத்தது. இதைத் தொடர்ந்து, புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியை, கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் தேன்மொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்பின், பாலாற்றில் ஐந்து கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன்கள், கேபிள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், தினமும் இப்பணிகளை கண்காணித்து வருகிறார். மேலும், ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவுபெறும் என, பொறியாளர்கள் தெரிவித்தனர்.பழவேலி, மாமண்டூர் பாலாற்றிலிருந்து, தினமும் 23 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பழவேலி பாலாற்றில், புதிதாக ஐந்து நீராதார கிணறுகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, பைப்லைன், கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பணிகள் முடிவுற்றபின், 21 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும். கோடைக்காலத்தில், நகரவாசிகளுக்கு, தங்கு தடையின்றி, குடிநீர் வினியோகம், தினமும் வழங்க உள்ளோம்.- விஜயகுமார்,நகராட்சி ஆணையர்,- செங்கல்பட்டு.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago