மேலும் செய்திகள்
சேதமான பஸ் நிழற்குடை சீரமைக்க வேண்டுகோள்
13-Nov-2024
உத்திரமேரூர்உத்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், திருப்புலிவனம் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி,பேருந்து வாயிலாக மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.இங்கு அமரும் இடம், தரை மற்றும் படிகெட்டு ஆகியவை, டைல்ஸ் கற்களால் பதிக்கப்பட்டு இருந்தது. முறையாக பராமரிப்பு இல்லாததால், டைல்ஸ் கற்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.பேருந்துக்காக வரும் பயணியர், நிழற்குடையின் உள்ளே செல்லும்போது, சேதமடைந்த பகுதியில் இடித்து கொள்கின்றனர்.எனவே சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
13-Nov-2024