அல்லாபாத் ஏரிக்கரை சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முடிவு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை சந்திப்பு வழியாக, திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியல் இருந்து, நேதாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, 7.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து, உயர்கோபுர மின்கம்பத்தை தாங்கிப் பிடிக்கும் பீடம் அமைக்கப்பட்டு, புதிதாக உயர்கோபுர மின்விளக்கு கம்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் பணி முடிக்கப்பட்டு உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு வரும் என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி. செல்வம் தெரிவித்தார்.