ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. நேற்று, பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அதை தொடர்ந்து, காலை தங்க கேடய உத்சவத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளினார். பிரம்மோத்சவத்தின் பிரபல உத்சவமான கருட சேவை நாளை நடைபெற உள்ளது. ஏப்.,19ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.