உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புகளின்றி தரைப்பாலங்கள்

தடுப்புகளின்றி தரைப்பாலங்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.தார் சாலை போடாத இடத்தில், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.குதிரைக்கால் மடுவு, கோவிந்தவாடி ஏரிக்கரை தரைப்பாலம் ஆகிய சில இடங்களில் இரும்பிலான தடுப்பு அமைக்கவில்லை.இதனால், காஞ்சிபுரம் - அரக்கோணம் மற்றும் அரக்கோணம் - காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தரைப்பாலங்களின் அருகே கவிழும் அபாயம் உள்ளது.எனவே, பிரதான தரைப்பாலங்களின் ஓரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், 'சாலை ஓரம் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை