காஞ்சி பஸ் நிலையத்தில் மண் அரிப்பால் பள்ளம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும்ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆற்காடு, வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நிறுத்தம் அருகில், மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியரும், பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி. ராஜ விநாயகம், காஞ்சிபுரம்.