மேலும் செய்திகள்
வடிகால்வாய் அமைக்க புத்தேரிவாசிகள் கோரிக்கை
21-Jan-2025
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, அண்ணா நெசவாளர் குடியிருப்பில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் வகையில், ஓரிக்கை பாலாறு மேம்பாலத்திற்கு செல்லும் சாலையோரம் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.மண்கால்வாய் என்பதால், கால்வாயில், செடி, கொடிகள், புல் முளைத்து மண் திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, கான்கிரீட் கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
21-Jan-2025